Tuesday 15 May 2012

முதலாழ்வார்கள்-2.பூதத்தாழ்வார்-ஒரு சிறிய குறிப்பு

ஐப்பசி அவிட்டத்தில் திருக்கடல்மல்லை கடற்கரையில் மலர்ந்த நீலோத்பலத்தில் கதையின் அம்ஸமாய் அவதரித்த பூதத்தாழ்வாரை துதிக்கிறேன்.

எவரொருவர் பரமபுருஷனுக்கு ஞானச் சுடர் விளக்கை ஏற்றினாரோ, கடல்மல்லையின் தலைவராய் குருக்கத்திப் பூவில் அவதரித்தருளினவரான அந்த பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீய:பதியின் கருணையால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவராய், சிறந்த கல்யாண  குணங்களையுடையவரான பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீமந்நாராயணனின் கௌமோதகி என்னும் கதாயுதத்திண் ஸக்தி ஸ்வரூபியான பூதத்தாழ்வார் என்னும் முனிவர் தலைவர் இவ்வுலகில் கிழக்கு கடற்கரையிலே, திருக்கடல்மல்லை என்னும் நகரில் பூப்பந்தலினுள் (நீலோபலத்தினுள் என்று பாடாந்தரம்) அதே ஸித்தார்த்தி வருடத்தில், அதே ஐப்பசி மாதத்தில் பொய்கை ஆழ்வார் அவதரித்த  மறுதினத்தில் அவதரித்தருளினார்.


No comments:

Post a Comment