Tuesday 15 May 2012

முதலாழ்வார்கள்-3.பேயாழ்வார்-ஒரு சிறிய குறிப்பு

ஐப்பசி சதயத்தில் திருமயிலையில் ஓர் கிணற்றில் செங்கழுநீர் (செவ்வல்லி) பூவிலிருந்து நந்தகமென்னும் வாளின் அம்ஸமாய் அவதரித்த பெரியவரான பேயாழ்வாரை வணங்குகிறேன்.

பொய்கை, பூதத்தாழ்வார்கள் அவதரித்த அந்த ஸித்தார்த்தி ஐப்பசி மாதத்தில் பூதத்தாழ்வார் அவதரித்த மறுதினம் சதய நக்ஷத்திரத்தில் மயிலையில் செங்கழுநீர் (செவ்வல்லி) நடுவிலிருந்து அவதரித்தவரும், பக்தியினாலே பெரியவரும், ஸாத்ய பக்தியே வடிவெடுத்தவரும், ஸ்ரீநந்தகம் என்னும் வாளின் அம்ஸமானவருமான பேயாழ்வாரை வணங்குகிறேன்.

மயிலை நகருக்குத்  தலைவராய், கிணற்றிலே செவ்வல்லி பூவிலே அவதரித்தவராய், திருவோடு கூடிய நாராயணனைக் கண்டு களித்தவரான பேயாழ்வாரை சரணடைகிறேன்.

தாமரை கேள்வனுடைய திருவடித் தாமரைகளில் பெருங்காதலால் உண்டான சிறந்த மயக்கத்தால் பேய்போலே திரிந்தமையால் பேயாழ்வார் என்று எங்கும் புகழ் பெற்ற குணக்கடலான பேயாழ்வாரை வணங்குகிறேன்.


No comments:

Post a Comment