Tuesday 15 May 2012

பன்னிரு ஆழ்வார்களின் வரலாறு


வியூக நிலையில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கும்  எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன்  பாவ புண்யங்களால் ப்ரபஞ்சத்தில் ப்ரஜைகள் யாவரும்  இப்பிறவிக்  கடலில் தத்தளிப்பதைப் பார்த்து அந்தரங்கத்து மனோ முடிவுகளை அப்போதே மலர்ந்தருள எண்ணினார். திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது புஜங்க சயனமாக தர்மத்தின் தேவனாகிய எமதர்மனின் செயல்பாட்டினை  கவனித்திடுவது போன்ற நிலையில் தென்திசை நோக்கியபடி திருக்கண் மலர்ந்து கடாக்ஷித்தார் ஸ்ரீமந்நாராயணன். "உங்களது பன்னிரு அம்சங்களும் லோகத்தை உத்தாரணம் செய்திட பூவுலகில் பல்வேறு வர்ணங்களில் ஜனனம் கொள்ளட்டும்.  எமது திருவடியை எப்போதும் சேவித்து சிந்தித்து வாழும் உங்களை ஆழ்வார்கள் என்று யாவரும் அழைப்பர். எம்முடைய சர்வமங்கள கல்யாண குண விசேஷங்களை அருந்தமிழ் தேனால் திருமஞ்சனம் செய்வீராக. வேதத்தின் சாரத்தையெல்லாம் பக்தர்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம் அமுதத்தமிழில் படைபீராக. நீங்கள் போற்றிய பாமாலை யாவும் "திவ்ய ப்ரபந்தம்" என்று மூவுலகம் போற்றும்".


மண்ணுலகில் அவதரிக்க போகும் ஆழ்வாராதிகள் ஸ்ரீமந்நாராயணன் திருவுள்ளம் கேட்டு பேரானந்தம் கொண்டனர். ஆழ்வார்கள் வைஷ்ணவத்திற்கு ஒளிவிளக்காக பிரகாசிகின்ற பரமபதம் தந்த பகவதோதமர்கள் ஆவர். கலியுகத்தின் பாவத்தை அழிக்கும் உலக சூரியனாக பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் பரந்தாமன் நீளாதேவி, பஞ்சாயுதங்கள், ஸ்ரீவத்ஸம், கெனன், துபம், வானமாலாதி சினைங்களையும் அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் முதலானோரையும் பன்னிரு ஆழ்வார்களாக ஆவதரிக்கும் படி கூறிய நிமித்தம் வைஷ்ணவம் தழைத்து ஓங்க திவ்ய ப்ரபந்தம் என்னும் அமுத பாசுரங்கள் நமது நெஞ்சங்களில் எல்லாம் பேரானந்தப் பெருவெள்ளத்தைப் பொங்கி பிரவகிக்கச் செய்தது.

திருமாலின் அவதாரங்கள் அனைத்திலும் ஆழ்வார்கள் மனம் இழந்தார்கள். ப்ராண நிலையில் ஆழ்வார் அருளும் மெய்ப்பொருள் உணர்வுகளும் ப்ரேம நிலையில் பரகால நாயகியாய் உருகும் பக்தப் ப்ரேமையும், நம் ஞானக்கண்ணை  திறப்பதுடன் பரமபக்திக்கும் வழி காட்டுகின்றன. நாலாயிர திவ்ய ப்ரபந்தமளித்த ஆழ்வார்களின் திருக்காவியம் மானுட மன இருளைப் போகும் ஞானவிளக்கு அடங்காத நீண்ட காலபிறவியாக நஞ்சை மாற்றும் அமுதமாகும்.




No comments:

Post a Comment