மானுட காதலுக்கு மாலவன் காதலே மண்ணுலகின் முன் மாதிரி பாடம். வாழ்க்கையின் சரணாகதி தத்துவம் அன்பின் மலர்ச்சியிலிருந்து தொடங்குகிறது.
'தமிழுக்கு அமுதென்று பேர்; அந்த தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று தமிழ் மொழியின் இனிமையும் மேன்மையும் சிலாகிக்கப்படுகிறது. அத்தகைய உயிரணைய தமிழை செழுமைப் படுத்தியதில் பக்தி இலக்கியங்களுக்குக் கணிசமான பங்கு உண்டு. அப்படிப்பட்ட தமிழில் பஞ்சாமிர்த தமிழமுதமாக நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தால் நம் நாவினிக்க செய்தவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்களின் திருக்காவியம் திருப்பாற்கடலில் கடைந்தெடுத்த தீந்தமிழ் தேவமிர்தம் போன்றதாகும். தமிழ் மொழிக்கு வலுவும் பொலிவும் கூட்டிய ஆழ்வார்களின் வரலாறோ காதல் பட வைக்கும் சுவையும், நெறியும், பக்தி பரவசமும் கலந்த முக்கனி சாறாக சிறந்து விளங்குகிறது. ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை படிக்குங்கால் நாவினிக்கும், செவி இனிக்கும், சிந்தை செழிக்கும். எம்பெருமான் அருளின் பெருமழையால் ஆற்றல் மிகுந்து கவிமாரிப் பெய்தவர்கள் ஆழ்வார்கள். வாழ்க்கையின் சரணாகதி அன்பின் மலர்ச்சியிலிருந்து தொடங்குகிறது என்பதை ஆழ்வார்கள் சாதித்து காட்டி இருக்கிறார்கள்.
ஆழ்வார்கள் பன்னிரண்டு பேராக இப்பூவுலகில் அவதரித்தார்கள். அவர்கள் தென் இந்தியாவில் தோன்றினார்கள். அவர்களால் இயற்றப்பட்ட தமிழ் பாசுரங்கள் 4000. அவை தான் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் எனப்படுகிறது. அவை வேதங்களுக்கு சமமாக கருதப்படுகிறது. வேதத்தை தமிழில் எளிதில் புரிந்து கொள்ள இவை நமக்கு கொடுக்கப்பட்டது. வேதத்தில் நம்மால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களை நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் மூலம் மிக எளிதில் புரிந்து கொள்ளலாம். அதனால் தான் இதற்கு தமிழ் வேதம் என்று பெயர். ஸ்ரீமன் நாராயணனின் கல்யாண குணங்களில் கரைக்கப்பட்டு மிகவும் சிறந்த குணங்களோடு எம்பெருமானின் திருவடியில் தங்களை ஆழப் புதைத்து கொண்டதால் அவர்களை ஆழ்வார்கள் என்று அழைக்கிறோம். அவர்கள் முறையே பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஸ்ரீ ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கையாழ்வார் எனப்படுகிறார்கள்.முதல் மூன்று ஆழ்வார்கள் முறையே பொய்கை ஆழ்வார், பூதத்தழ்வார், பேயாழ்வார் இவர்கள் முதலாழ்வார்கள் எனஅழைக்கப்படுவார்கள்.
பன்னிரு ஆழ்வார்கள் |
எண்
|
ஆழ்வார்
|
பிறந்த இடம்
|
மாதம்
|
நக்ஷத்திரம்
|
1
|
பொய்கை ஆழ்வார்
|
காஞ்சிபுரம் |
ஐப்பசி
|
திருவோணம் |
2
|
பூதத்தாழ்வார்
|
திருக்கடல்மல்லை
|
ஐப்பசி |
அவிட்டம்
|
3
|
பேயாழ்வார்
|
மயிலாப்பூர்
|
ஐப்பசி
|
ஸதயம்
|
4
|
திருமழிசை ஆழ்வார்
|
திருமழிசை
|
தை
|
மகம்
|
5
|
நம்மாழ்வார் |
ஆழ்வார் திருநகரி
|
வைகாசி
|
விசாகம்
|
6
|
மதுரக்கவி ஆழ்வார்
|
திருக்கோளூர்
|
சித்திரை
|
சித்திரை
|
7
|
குலசேகர ஆழ்வார்
|
திருவஞ்சிக்களம்
|
மாசி
|
புனர்வசு
|
8
|
பெரியாழ்வார்
|
ஸ்ரீவில்லிபுத்தூர்
|
ஆனி
|
ஸ்வாதி
|
9
|
ஆண்டாள்
|
ஸ்ரீவில்லிபுத்தூர்
|
ஆடி
|
பூரம்
|
10
|
தொண்டரடிப்பொடிஆழ்வார்
|
திருமண்டங்குடி
|
மார்கழி |
கேட்டை
|
11
|
திருப்பாணாழ்வார்
|
திருஉறையூர்
|
கார்த்திகை |
ரோஹிணி
|
12
|
திருமங்கை ஆழ்வார்
|
திருவாலிதிருநகரி
|
கார்த்திகை
|
கிருத்திகை
|
No comments:
Post a Comment